.

.

Tuesday, April 30, 2013

ஆறாவதுதிருமணநாளைஅமெரிக்காவில்கொண்டாடியஅபிஷேக்பச்சன்-ஐஸ்வர்யாராய்தம்பதி!


கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமிதாப்பச்சனின் மகனான அபிஷேக்பச்சனும், உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யாராயும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். என்றாலும், அதன்பிறகும் சினிமாவில் நடித்து வந்த ஐஸ்வர்யாராய், பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக நடிப்பதை நிறுத்தி விட்டு, ஆரத்யா என்ற மகளை பெற்றார். இப்போது ஆரத்யாவுக்கு ஒன்றரை வயது ஆகிறது.

இந்நிலையில், சமீபத்தில் தங்களது ஆறாவது திருமண நாளை கொண்டாடுவதற்காக அபிஷேக்-ஐஸ்வர்யா தம்பதியினர் ஆரத்யாவுடன் அமெரிக்கா சென்றனர். 15 நாட்களுக்கு மேலாக அமெரிக்காவில் ஜாலி டூர் மேற்கொண்ட அவர்கள், சில தினங்களுக்கு முன்பு மும்பை திரும்பினர். அப்போது, அவர்களின் வருகையை அறிந்திருந்த மீடியாவினர் விமான நிலையத்திலேயே சுற்றி வளைத்துக்கொண்டனர்.

அதனால் இதுவரை தனது மகள் ஆரத்யாவை மீடியா கண்களில் அதிகமாக படாமல் வைத்திருந்த ஐஸ்வர்யாராய், முதன்முதலாக மகளை கேமராக கண்களுக்கு காண்பித்திருக்கிறார். பெரும்பாலும் சினிமா நட்சத்திரங்கள் தங்களது வாரிசுகளை வெளி உலகத்துக்கு தெரியாமல்தான் வளர்ப்பார்கள். ஆனால், அபிஷேக்பச்சன்-ஐஸ்வர்யாராய் தம்பதி இதிலிருநது மாறுபட்டு மகளை வெளி உலகத்துக்கு காண்பித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

0 Comments:

Post a Comment

இலங்கைச் செய்திகள்

உலகச் செய்திகள்

ஜோதிடம்

மரண அறிவித்தல்கள்

பெயர் வடிவேலு
பிறந்த இடம் கனகரெத்தினம்
வசிப்பிடம் கனடா
பிறந்த திகதி   : 20.04.1986
பெயர் வடிவேலு
பிறந்த இடம் கனகரெத்தினம்
வசிப்பிடம் கனடா
பிறந்த திகதி   : 20.04.1986

அவுஸ்திரேலியா,நியுஸிலாந்து செய்திகள்

கவிதைகள்

சினிமா செய்திகள்

இந்தியச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

தொழில்நுட்பச் செய்திகள்

எம்மவர் நிகழ்வுகள்

 

glowlinknews Copyright 2013 . .