
இன்று நடிகர் அஜீத் தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஏற்கனவே தனது ரசிகர் மன்றத்தை கலைத்தவர் அஜீத். இருந்தபோதும் அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாட அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்தனர். இதுப்பற்றி கேள்விப்பட்ட அஜீத், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தடை விதித்தார். தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்றும் கட்-அவுட் பேனர்கள் வைக்கக்கூடாது என்றும் தெரிவித்தார். வீணாக தனது பிறந்த நாளுக்கு விரயம் செய்யும் பணத்தை பெற்றோருக்காக செலவிடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். அஜீத்தை கோரிக்கையை ஏற்று அவரது ரசிகர்களும் ஆடம்பர கொண்டாட்டங்களை ரத்து செய்தனர். இதற்கு அஜீத்தும் நன்றி தெரிவித்தார்.
தற்போது நடிகர் அஜீத், விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புக்கு தனது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்காவுடன் சென்ற அஜீத், அங்கு தனது பிறந்தநாளை கேக் வெட்டி படப்பிடிப்பு தளத்தில் எளிமையாக கொண்டாடினார். அஜீத்துக்கு படப்பிடிப்பு குழுவினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
புதிய பட டீசர் வெளியீடு : தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று நடிகர் அஜீத் உத்தரவு போட்டதால் ரசிகர்கள் சற்று சோர்ந்து போயினர். இருந்தபோது, அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜீத் நடித்துள்ள புதிய படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். தற்போது யூ-டியூப்பில் வெளியாகி இருக்கும் இந்த டீசரை ஏராளமான ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். ஆனாலும் டீசரிலும் படத்தின் டைட்டீல் வெளியிடப்படவில்லை. மாறாக அந்த டீசரில் இந்த புராஜக்ட்டின் பெயர் என்ன என்று கேட்க, அதற்கு அஜீத் டைட்டீல் இன்னும் வைக்கவில்லை என்று பதிலளிக்கிறார். இருந்தபோதும் இன்று படத்தின் டைட்டீல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. படத்தின் டைட்டீலில் இவ்வளவு சஸ்பென்ஸ் ஏனோ...? தெரியவில்லை.
இதனால் தற்போது சமூக வலைத்தளங்களில் தல ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதப்பதை காணக் கூடியதாக உள்ளது.
அஜித்திற்கு அவரது ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்களைகுலோவ் லிங்க் செய்திகள் தெரிவித்துக் கொள்கின்றது.
0 Comments:
Post a Comment